யதா3தி3த்1யக31ம் தே1ஜோ ஜக3த்1பா4ஸயதே1‌கி2லம் |

யச்11ன்த்3ரமஸி யச்1சா1க்3னௌ த1த்1தே1ஜோ வித்3தி4 மாமக1ம் ||12||

யத்—--எது; ஆதித்ய-கதம்—--சூரியனில்; தேஜஹ--—பிரகாசம்; ஜகத்--—சூரிய மண்டலத்தை; பாஸயதே--— ஒளிரச் செய்யும்; அகிலம்--—முழுவதும்; யத்—--எது; சந்திரமஸி--—சந்திரனில்; யத்--—எது; ச--—மேலும்; அக்னௌ—---அக்கினியில்; தத்—--அது; தேஜஹ--—பிரகாசம்; வித்தி--—அறிக; மாமகம்--—என்னுடையது.

అనువాదం

BG 15.12: நான் சூரிய மண்டலம் முழுவதையும் ஒளிரச் செய்யும் சூரியனின் பிரகாசத்தைப் போன்றவன் என்பதை அறிந்துகொள். சந்திரனின் பிரகாசமும், நெருப்பின் பிரகாசமும் என்னிடமிருந்து வருகிறது.

వ్యాఖ్యానం

நமது மனித இயல்பு என்னவென்றால், நாம் எதை முக்கியத்துவம் வாய்ந்ததாக உணர்கிறோமோ அப்பொருள் அல்லது உறவின் பக்கம் நாம் ஈர்க்கப்படுகிறோம். உடல், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் மற்றும் செல்வம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, நாம் அவர்களிடம் ஈர்க்கப்படுகிறோம். இந்த வசனங்களில், ஸ்ரீ கிருஷ்ணர் படைப்பில் உள்ள அனைத்து குறிப்பிடத்தக்க விஷயங்களிலும் வெளிப்படுவது அவருடைய ஆற்றல் என்பதை வெளிப்படுத்துகிறார். சூரியனின் பிரகாசத்திற்கு அவர் பொறுப்பு என்கிறார் ஒவ்வொரு நொடியும் ஆயிரக்கோடிகள் கணக்கான அணுமின் நிலையங்கள் வெளியிடும் ஆற்றலை சூரியனும் வெளியிடுவதாக விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். அது பல நூறு கோடி ஆண்டுகளாகச் செய்து வருகிறது, இன்னும், அது குறையவில்லை, அல்லது அதன் செயல்முறைகளில் எதுவும் தவறாகப் போகவில்லை. ஒரு அற்புதமான வானப் பொருளாக சூரியன் திடீரென ஒரு பெரிய வெடிப்பின் காரணமாக தோன்றியிருக்கலாம் என்று நினைப்பது குழந்தைத்தனமாக இருக்கிறது. சூரியன் எதுவாக இருந்தாலும் அது கடவுளின் திருவுருவம்.

இதேபோல், சந்திரன் இரவு வானத்தை ஒளிரச் செய்வதன் மூலம் ஒரு அற்புதமான செயல்பாட்டைச் செய்கிறது. சாதாரண அறிவுத்திறன் மூலம், சூரியனின் ஒளியின் பிரதிபலிப்பின் காரணமாக சந்திரன் உள்ளது என்று விஞ்ஞான ரீதியாக நாம் முடிவு செய்யலாம். இருப்பினும், இந்த அற்புதமான ஏற்பாடு கடவுளின் செழுமையால் கொண்டுவரப்பட்டது., மேலும் சந்திரன் கடவுளின் மகிமைகளின் வெளிப்பாடுகளில் ஒன்றாகும்.

இந்தச் சந்தர்ப்பத்தில் கே1னோப1நிஷத3த்தில் ஒரு கதை இருக்கிறது. 

தேவலோக கடவுள்களுக்கும் மற்றும் (அடுத்த பகுதிகளில் வசிக்கும் பேய்களுக்கும் - (தை3த்1தி1யர்கள்) இடையே ஒரு நீண்ட போர் மூண்டது, அதில் தேவர்களுக்கும் இறுதியாக வெற்றி பெற்றனர். இருப்பினும், அவர்களின் வெற்றி பெருமைக்கு வழிவகுத்தது, மேலும் அவர்கள் அதை தங்கள் சொந்த பலத்தால் பெற்றதாக நினைக்கத் தொடங்கினர். அவர்களின் பெருமையை அழிக்க, கடவுள் ஒரு யக்ஷனாக (ஒரு அரை-வானவர்) தோன்றி, வானத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அவருடைய வடிவம் மிகவும் பிரகாசமாக இருந்தது.

தேவலோகத்தின் அரசனான இந்திரன், அவரை முதலில் தன்னை விட பிரகாசமாக இருக்கும் ஒரு யக்ஷனைக் கண்டு வியந்தான். அவரைப் பற்றி விசாரிக்க அக்னியை அனுப்பினான். அக்னி யக்ஷனிடம் சென்று கூறியது, 'நான் நெருப்புக் கடவுள், முழு பிரபஞ்சத்தையும் ஒரு நொடியில் எரித்து சாம்பலாக்கும் சக்தி என்னிடம் உள்ளது. இப்போது நீ யார் என்பதை வெளிப்படுத்து.

கடவுள், அரை-வானவர் வடிவில், காய்ந்த வைக்கோலின் சிறிய பகுதியை முன்னால் வைத்து, ‘தயவுசெய்து இதை எரித்து விடுங்கள்’ என்றார்

அதைப் பார்த்து சிரிக்கத் தொடங்கிய அக்னி, ‘இந்தப் புல்லுருவி என்னுடைய எல்லையற்ற சக்திக்கு ஏதேனும் தருமா?’ என்று நகையாடி அதை எரிக்க முன்னோக்கிச் சென்றபோது, ​​கடவுள் அக்னியிடம் இருந்து அவனது சக்தியை அணைத்துவிட்டார். குளிரால் நடுங்க தொடங்கிய அக்னி எரிப்பதை பற்றி நினைக்கக் கூட தகுதியற்ற நிலையில், ஒதுக்கப்பட்ட பணியில் தோல்வி அடைந்து வெட்கப்பட்டார்

இந்திரன் அரை-வானவரின் ஆளுமையைப் பற்றி விசாரிக்க காற்றுக் கடவுளான வாயுவை அனுப்பினான். வாயு சென்று, ‘நான் காற்றுக் கடவுள், நான் விரும்பினால், ஒரு நொடியில் உலகம் முழுவதையும் தலைகீழாக மாற்ற முடியும். இப்போது நீ யார் என்பதை வெளிப்படுத்து.' என்று கூறியது.

மீண்டும், கடவுள், அரை-வானவரின் வடிவில், புல்லுருவி அவர் முன் வைத்து, ‘தயவுசெய்து இதைப் புரட்டவும்’ என்று வேண்டினார்.

வைக்கோலைப் பார்த்து சிரித்த வாயு மிக வேகமாக முன்னேறி சொந்த கால்களை கூட முன்வைப்பது கடினமாக உணர்ந்தான். எனவே, வேறு எதையும் எப்படி திருப்புவது ? ஆனால் இதற்கிடையில், கடவுள் அவரது ஆற்றல் மூலத்தையும் அணைத்தார்

இறுதியாக, இந்திரன் அரை-வானவர் யார் என்பதைத் தீர்மானிக்கச் சென்றான். இருப்பினும், இந்திரன் வந்ததும், கடவுள் மறைந்துவிட்டார், அவருடைய இடத்தில், அவரது தெய்வீக யோகமாய சக்தியான உமா அமர்ந்திருந்தார். இந்திரன் உமாவிடம் அரை வானவரை பற்றிப் பற்றிக் கேட்டபோது, ​​உமா பதிலளித்தார், 'அவர் உன் ஒப்புயர்வற்ற தந்தை, அவரிடமிருந்தே தேவலோக தெய்வங்களான நீங்கள் அனைவரும் உங்கள் வலிமையைப் பெறுகிறீர்கள். அவர் உங்கள் பெருமையை அழிப்பதற்கு வந்தார்.'

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
15. புருஷோத்தம யோகம்
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

ఏ శ్లోకానికైనా వెంటనే వెళ్లండి

మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి

Book with feather

మీ స్వంత గీతను పొందండి

Bhagavad Gita — The Song of God భగవద్గీత
The Song of God
Order Now
Bhagavad Gita for Everyday Living Bhagavad Gita for
Everyday Living
Order Now

మాతో అనుసంధానంలో ఉండండి!

రోజు శ్లోకం

పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్‌కు చేరుతుంది!

"భగవద్గీత - రోజు శ్లోకం" సభ్యత్వం పొందినందుకు ధన్యవాదాలు!

Get Your Own Gita
Bhagavad Gita — The Song of God

భగవద్గీత
The Song of God

Order Now
Bhagavad Gita for Everyday Living

Bhagavad Gita for Everyday Living

Order Now
What's New in
Holy Bhagavad Gita
  • Redesigned home, verse, and chapters pages
  • Personal accounts — sign in with email, phone, or Google
  • Bookmark verses and save notes on any verse
  • Track your reading progress across all 18 chapters
  • Quick-jump to any verse
  • Full site now available in all 6 languages
  • Overall visual polish and consistency